அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் ஓடிடி தளத்திலும் கூட ஒரே நாளில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படமும், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படமும் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ‘துணிவு’ படத்திற்கு முதல் நாள் நள்ளிரவு 1 மணி அளவில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. ‘வாரிசு’ படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணி அளவில் திரையிடப்பட்டது.
இரண்டு படங்களும் விமர்சனங்களைத் தாண்டி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. ‘வாரிசு’ படம் உலக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. ‘துணிவு’ படமும் உலக அளவில் ரூ.200 கோடியை தாண்டி வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு படங்களுமே விரைவில் ரூ.100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திரையரங்குகளில் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானதைப் போல ஓடிடியிலும் ஒரே நாளில் ‘வாரிசு’, ‘துணிவு’ படங்கள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் நடித்த ‘துணிவு’ படத்தை 65 கோடி ரூபாய் கொடுத்து ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை 75 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளதாம்.
அந்த வகையில் இரண்டு படங்களும் வரும் பிப்ரவரி 10-ம் தேதி ஒரே நாளில் ஓடிடி தளங்களில் வெளியாகும் என்ற தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், தமிழ் புத்தாண்டையொட்டி ‘வாரிசு’ திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படலாம் எனக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
21 mins ago
தமிழகம்
58 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஓடிடி களம்
12 hours ago