ஓடிடியில் வெளியாகும் ‘பேர்ல் இன் தி பிளட்’

By செய்திப்பிரிவு

செவன்ஹில் பிக்சர்ஸ் யுனிவர்சல் மூவிடோன் நிறுவனம் சார்பில், கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழரான கென்கந்தையா தயாரித்து, இயக்கியிருக்கும் படம், ‘பேர்ல் இன் தி பிளட்’.

த்ரில்லராக உருவாகி இருக்கும் இதில் சம்பத் ராம், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கல்பனா ஸ்ரீ, ஷாலினி மலர், ஜெயசூர்யா மற்றும் புதுமுகங்கள் நடித்துள்
ளனர். சதீஷ் எம்.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு செஞ்சு லக்‌ஷ்மி இசையமைத்துள்ளார்.

படம் பற்றி கென் கந்தையா கூறும்போது, “உலக அளவில் நடக்கும் இன அழிப்பை பேசும் படமாக இது இருக்கும். ஈழத்தில் நடந்த ‘வெள்ளை வேன்’ கதையை யாரும் காட்சிப்படுத்தியதில்லை. பதிவு எண் இல்லாத, வெள்ளை நிற பலகைக் கொண்ட வாகனத்தில் வந்து தமிழ் மக்களை கடத்தி கொலை செய்வார்கள். வந்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலும், நீதியும் கிடைக்காது. இந்தச் சம்பவங்களை மையமாக வைத்து படம் உருவாகி இருக்கிறது. திரையரங்குகளில் வெளியிடாமல் ஒடிடி-யில் வெளியிட இருக்கிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

உலகம்

25 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

38 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

44 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

மேலும்