பாக். முன்னேற்றத்தில் கோட்டைவிட்டது: சிவராம் பாரதி

By செய்திப்பிரிவு

செய்தி:>இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் எச்சரிக்கை

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சிவராம் பாரதி கருத்து:

பாகிஸ்தான் அரசியல்வாதிகள், ராணுவத்தினர் எல்லோருக்குமே இந்தியா என்றால் அலர்ஜி. அவர்கள் எப்போதும் இந்தியாவை பற்றியே சிந்திக்கிறார்கள். தன நாட்டு மக்களையும் அதே போல சிந்திக்க பழக்கி விட்டார்கள். அதனால் நாட்டு முன்னேற்றத்தில் கோட்டை விட்டு விட்டார்கள்.

இன்று உலக அளவில் தனிமைப்பட்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது. தன் நாட்டில் இருக்கும் பிரச்சனைகளான, கல்வி, வேலை வாய்ப்பு, அறிவியல் முன்னேற்றம், சுகாதாரம், மின்சார உற்பத்தி போன்ற மக்கள் நல திட்டங்களில் பாகிஸ்தானியர் மிகவும் பின் தங்கியே இருக்கிறார்கள்.

பொருளாதாரத்திற்கு அமெரிக்காவிடம் பிச்சை எடுக்கிறார்கள். இந்தியாவை மிரட்ட சீனாவுடன் நட்பு பாராட்டுகிறார்கள். அவர்கள் நாட்டில் தற்போது கிரிக்கெட் விளையாட கூட உலக நாடுகள் விரும்புவதில்லை. சரி இந்தியாவிடம் பலமுறை போரிட்டு வெற்றி பெற்றதா என்றால் மூக்கறுபட்டதுதான் மிச்சம். அதனால்தான் தீவிரவாதிகளை அனுப்புகிறார்கள். தற்போது அதற்கும் check வைத்தாகி விட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

19 mins ago

க்ரைம்

33 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

41 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்