உணர்ச்சிவசப்படுபவர்கள் கவனத்துக்கு...- பாலன்

By செய்திப்பிரிவு

செய்தி:>உ.பி. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை: தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள சப்-இன்ஸ்பெக்டர் சுட்டதாக போலீஸ் தகவல்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பாலன் கருத்து:

சட்டம் படிக்காத மக்களும் வாகனங்களுக்கு தீ வைக்கின்றனர். சட்டம் படித்த வக்கீல்களும் தீ வைக்கின்றனர். ஒரு காவல்துறை ஓட்டுனரை, வக்கீல்கள் சூழ்ந்து கொண்டு தாக்கிய நிகழ்வு நீங்கள் இந்துவில் படித்திருப்பீர்கள். நல்லவேளை அவர் துப்பாக்கி எடுக்கவில்லை!

என்னைப் பொருத்தவரை ஒரு இக்கட்டான, உணர்வு நிதானம் தவறிய சூழ்நிலையில், மனிதன் அல்லது மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்று மட்டும் கவனிக்கிறோம். விவாதிக்கிறோம்.

என்ன செய்ய மறுத்துள்ளனர் என்பதையும் கவனிக்கப்பட வேண்டும் நுட்பமாக. அந்த ஜீப் ஓட்டுனர், துப்பாக்கி, கத்தி, கட்டை, இரும்பு பைப், அரிவாள், ஜீப் ன் ஜாக்கி லீவர் போன்றவற்றை எடுக்க மறுத்துள்ளார்.

மனிதர்கள் உணர்ச்சிவசப்பட்டு எதாவது செய்தாலும், ஆழ்மனதில் பதிந்துள்ள பல நல்ல சிந்தனைகளால் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் என்ன செய்ய மறுத்துள்ளனர் என்பதனையும் அறியலாம். உணர்ச்சிவசப்படுபவர்கள் கற்றுக்கொள்ள இன்னும் பல விஷயங்கள் அவர்களிடம் இருப்பதை தெரிந்துகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

55 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வலைஞர் பக்கம்

27 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்