இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அமைதி திரும்பும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது தெரிவித்துள்ளார்.
ஜம்மு பகுதியிலுள்ள ஜம்மு,சம்பா, கதுவா மாவட்டங்களில் எல்லை தாண்டிய தாக்குதல் தொடர்பாக முதல்வர் முப்தி முகமது சயீது சட்டப்பேரவையில் பேசியதாவது: ஜம்மு பகுதியில் 2002 முதல் 2010-ம் ஆண்டு வரை போர் நிறுத்த ஒப்பந்
தத்தை மீறி துப்பாக்கிச் சூடு எதுவும் நடைபெறவில்லை. எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் அமைதியாக வாழ்வதை உறுதி செய்யும் விதத்தில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
எல்லையில் தாக்குதல் காரணமாக, எல்லையோரத்தில் வசிக்கும் நமது விவசாயிகள் பயிர்சேதம், உயிருக்கு அச்சுறுத்தல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அமைதியை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தானுடன் உரிய நடவடிக்கையை தொடங்கியுள்ளோம். எல்லைப்பகுதியில் மீண்டும் அமைதி திரும்பும் என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
58 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago