எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

எஸ்எஸ்எல்சி முடித்த மாணவர் களுக்கு அசல் மதிப்பெண் சான்றி தழ் நாளை (புதன்கிழமை) முதல் வழங்கப்படும் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி,நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாளை அசல் மதிப்பெண்

கடந்த மார்ச் மாதம் நடை பெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 26-ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப் பெண் சான்றிதழ் விநியோகிக் கப்படும். தனித்தேர்வர்கள் மதிப் பெண் சான்றிதழ்களை அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத் திலேயே பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்களில் மாண வர்களின் பெயர் முதன்முறையாக தமிழ்மொழியில் பதிவு செய்யப் பட்டு வழங்கப்படுகிறது.

தமிழ் மொழியில் பதியப்பட்ட பெயரில் தவறான பதிவுகள் உள்ள தாக தலைமை ஆசிரியர்கள் கண்டறிந்தால், அப்பதிவுகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு 26-ம் தேதி முதல் வாய்ப்பளிக் கப்பட்டுள்ளது. அதையும் மீறி, தவறான பதிவுகள் இருப்பதாக மாணவர்கள், பெற்றோர் கண்ட றிந்தால், பள்ளிக்கு 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 4-ம் தேதிக்குள் நேரில் சென்று, தமிழ்ப்பெயரில் திருத்தம் கோரும் கோரிக்கைக் கடிதத்தை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அளிக்க வேண்டும்.

அறிவுறுத்தல்

திருத்தங்கள் கோரும் மாண வர்களிடம் விண்ணப்பத்தை பெற வும், திருத்தங்களை இணைய தளத்தின் வழியாக மேற்கொண்டு அரசுத் தேர்வுத் துறைக்கு அனுப்ப வும், பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்ப் பெயரில் திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்ட புதிய மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 21 முதல் தாங்கள் படித்த பள்ளிக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். புதிய மதிப்பெண் சான்றிதழை பெறும்போது மாணவர்கள் ஏற்கெனவே பெற்ற பழைய அசல் மதிப்பெண் சான்றிதழை பள்ளியில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

31 mins ago

க்ரைம்

45 mins ago

இந்தியா

6 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

53 mins ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்