மருத்துவர் கு. கணேசனின் ‘மீண்டும் தாக்கும் டெங்கு’ கட்டுரை தமிழக உள்ளாட்சித் துறைக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தனி மனிதருக்குமான எச்சரிக்கை. சமீபத்தில் வாட்ஸ்அப் செய்தி ஒன்றில், சாலையோரம் இளநீர் விற்கும் ஒருவர் இளநீரைக் குடிப்பவர்கள் குடித்து முடித்த இளநீரை வழக்கமான முறையில் இரண்டாக வெட்டிப் போடாமல் நான்காக வெட்டி எறிந்துள்ளார்.
ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று கேட்டதற்கு இரண்டாக வெட்டி எறிந்தால் அதில் தேங்கும் மழைநீரில் கொசு வளரும். நான்காக வெட்டி எறிந்தால் அதில் நீர் தேங்காது, கொசுவும் வளராது என்று கூறியதாக ஒரு செய்தி வந்தது. இளநீர் விற்பவருக்கு சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையைப் போல ஒவ்வொரு தனி மனிதரும் சமூக அக்கறையோடு, தன்னைச்சார்ந்த இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொண்டாலே டெங்கு போன்ற நோய்களிலிருந்து பெரிதும் விடுபடலாம்.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
க்ரைம்
20 mins ago
தமிழகம்
17 mins ago
கல்வி
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
2 hours ago