'இந்திய முஸ்லிம்கள் கொண்டாட சில குரல்கள்' கட்டுரை சரியான நேரத்தில் வந்த சரியான பதிவு.
முஸ்லிம் சமுதாயம் கர்வமும் பெருமையும் கொள்ளத் தக்க இரு பெரும் கலைஞர்களுக்கு சயீத் நூரி அறிவித்த ‘ஃபத்வா’வை இந்திய முஸ்லிம்கள் யாரும் பொருட்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. நான் நண்பர்களிடம் உரையாடும்போது, “இஸ்லாம் அனைவரும் கடைப்பிடிக்கக்கூடிய மிக எளிதான மார்க்கம். ஆனால் சில அரைகுறைகள், அது ஒரு கடுமையான மதம் என்னும் தவறான எண்ணத்தைச் சமூகத்தின் மனதில் விதைத்துவிட்டார்கள்" என்பேன்.
ஈரான் ஒரு இஸ்லாமிய நாடு. இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு படம் எடுத்தார் என்றால் அந்நாட்டு அரசே இயக்குநர் மஜீத் மஜிதி மீது நடவடிக்கை எடுத்து படத்தையும் தடை செய்திருக்கும். ஆனால், மும்பையில் இருந்துகொண்டு தேவையில்லாமல் ‘ஃபத்வா’ என்ற பெயரில் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தும் செயலில் சயீத் நூரி ஈடுபட்டுவிட்டார். இச்செயல் கண்டிக்கத் தக்கது. ஏ.ஆர்.ரஹ்மானும் அற்புதமான அறிக்கையை பதிலாக அளித்ததன் மூலம் தன்னை ஒரு கண்ணியமான இஸ்லாமியர் என்று அடையாளம் காட்டி விட்டார். கட்டுரையாளர் சொல்வதுபோல் மதவெறி சக்திகளால் நமது சமூகமும் நாடும் பிளவுபடுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
க்ரைம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
உலகம்
9 hours ago
இந்தியா
10 hours ago