அரசியல் கட்சி நடத்துவதும், ஆட்சிக் கனவு காண்பதும் அவரவர் உரிமை.
அவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்து அவர்களுக்கு உரிய இடத்தை மக்கள் வழங்குகிறார்கள். இன்று அதிமுகவின் ஊழல்கள்குறித்து உரக்கப் பேசும் இவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
அன்புமணி மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் செய்து நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருப்பவர்தானே? தன் தந்தையுடன் சேர்ந்து ஜாதியைத் தூக்கிப்பிடிக்கிறாரே? அது இவர் கற்ற கல்விக்கு அழகா?
பாலகிருஷ்ணன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…
***
அரசியல் கட்சியாக அதிகாரத்துக்கு ஆசைப்படலாம், பட வேண்டும். அதுவே, அரசியல் கட்சியின் இலக்கணமும். ஆனால், அதற்குரிய தகுதிகள் உள்ளனவா என்பதே கேள்வி. நீங்கள்தானே அன்று, கலைஞர் கட்சிக்கும் நடிகை கட்சிக்கும் ஓட்டுக்காகவும் சீட்டுக்காகவும் மாறி மாறிப் பேரம் பேசிக் காவடி தூக்கினீர்கள்? அப்போது தெரியவில்லையா அவர்கள் கலைஞர் என்றோ, நடிகர் / நடிகை என்றோ?
பொன். முத்துக்குமார், ‘ தி இந்து’ இணையதளம் வழியாக…
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
உலகம்
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
தமிழகம்
9 hours ago