சீரழியும் பவானி

By செய்திப்பிரிவு

வீராணம் ஏரிப்படுகையைத் தொடர்ந்து, கொங்கு நாட்டை வளப்படுத்தும் பவானி ஆறு பற்றிய கட்டுரையைத் தொடர்ந்து படித்துவருகிறேன். இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமான கட்டுரை இது.

இதே பவானி ஆற்றைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1904-ம் ஆண்டு எச்சரிக்கைக் கல்வெட்டு ஒன்றை வைத்து பவானியைப் பராமரித்திருக்கிறார்கள். அதில், ‘இதனால் எல்லோருக்கும் தெரிவிப்பது காவிரியாற்றில் சுடுகாட்டுத்துறை முதல் கூடுதுறை வரை துணி துவைப்பது, ஆடு மாடு கழுவுவது, பாத்திரம் தேய்ப்பது ஆகிய எந்த அசிங்கமும் செய்வோருக்கு ரூ.50-க்கும் குறையாத அபராதம் விதிக்கப்படும்.

TSA ரங்கசாமி செட்டி, சேர்மன்’என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இப்படிப் பராமரிக்கப்பட்ட பவானி ஆற்றைத்தான் நெசவு மற்றும் ஆலைக் கழிவுகளால் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி வருகிறோம் நாம்!

- கி. ஸ்ரீதரன், தொல்லியல் துணைக் கண்காணிப்பாளர் (ஓய்வு), சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

11 mins ago

க்ரைம்

29 mins ago

ஜோதிடம்

27 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

36 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

44 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்