கதையின் நாயகனும் வில்லனும் மோடிதான்

By செய்திப்பிரிவு

‘தொடங்கியது மோடி X மோடி ஆட்டம்’ கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல் தனது கதையின் நாயகனும் வில்லனும் மோடிதான்.

ஊதிப் பெருக்கப்பட்ட வண்ண பலூன்களில் முதல் பலூன் டெல்லியில் உடைக்கப்பட்டிருக்கிறது. மற்ற பலூன்கள் கூரிய ஊசி முனையின் தீண்டலுக்காகக் காத்திருக்கின்றன. தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் அனைத்துச் சந்தர்ப்பங்களையும் தவற விடாமல் பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியத்தை தேசத்தின் முன்னேற்றத்துக்கு மோடி பயன்படுத்தினால் நாயகராகும் சாத்தியமுண்டு. மோடியை நெறிப்படுத்தும் சாமர்த்தியம் அவரது கட்சிக்கு இல்லை. எதிர்க் கட்சிக்குமில்லை.

ஆம் ஆத்மிக்கு முன்னோடியாய் இருந்திருக்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி அதன் சாத்தியங்களையெல்லாம் விரயம் செய்துகொண்டிருக்கிறது. இந்த அரசியல் சூழலில், ரயில் டெல்லியிலிருந்து புறப்பட்டிருக்கிறது. அது கடக்க வேண்டிய தூரம் அதிகம். தமிழகம் வந்து சேர வேண்டுமெனும் பேராவலுடன் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

- பி.சந்தானகிருஷ்ணன்,தஞ்சாவூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்