இறந்த மகனை அடக்கம் பண்ணக்கூட வழியில்லாத ‘தாய் தனது மகனின் உடலை அரசு மருத்துவமனைக்குத் தானம் செய்த செய்தி’ படித்து மனம் கலங்கிப்போனேன். இது அந்தத் தாயின் தனிப்பட்ட சோகம் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சோகமும்கூட. அந்தத் தாயின் ஸ்தானத்தில் நம்மையோ அல்லது நமது தாயையோ வைத்துப்பார்த்தால் அந்த சோகத்தின் சுமை இன்னமும் அதிகமாவது தெரியும்.
மாவட்ட ஆட்சியரையும் சட்டமன்ற உறுப்பினரையும்கூட உதவிக்கு அழைத்தேன். யாரும் எதுவும் செய்யவில்லை என்று அந்தத் தாய் சொல்வது மனதைப் பிழிகிறது. குடிமக்களின் துயரத்தைத் தீர்த்துவைப்பதே ஒரு மக்கள் நல அரசின் கடமை. அவ்வாறான மக்கள் நல அரசை இன்னும் நாம் பெறாதது நமது துரதிர்ஷ்டமே.
- கே.எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 mins ago
இந்தியா
30 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago