இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இந்தியச் சிறைகள் கைதிகளால் நிரம்பிவழிவது குறித்தும் சட்டரீதியான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத காரணத்தால் பெரும்பாலும் ஏழைக் கைதிகள் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவிக்கும் அவலம் குறித்தும் கவலையுடன் பேசியிருக்கிறார்; இந்த நிலையில் மாற்றம் கொண்டுவர நீதித் துறைக்கும் மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுத்திருக்கிறார். நாட்டின் முதல் குடிநபர், சிறைக் கைதிகள் - குறிப்பாக பொருளாதார வசதியற்றவர்கள் - தொடர்பான அக்கறையை வெளிப்படுத்தியிருப்பது, கைதிகளின் உரிமைகளுக்காகச் சட்டரீதியாகப் போராடும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் முயற்சிகளுக்கு வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது.
நவம்பர் 26 அன்று தேசிய சட்ட நாள் நிகழ்வில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோருடன் பங்கேற்ற குடியரசுத் தலைவர் முர்மு, “சிறைகளில் கைதிகள் எண்ணிக்கை பெருகிவருவதால் நாம் புதிய சிறைகளைத் திறக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. முன்னேறிக்கொண்டிருக்கும் சமூகத்துக்கு புதிய சிறைகள் எதற்கு? மாறாக நாம் சிறைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago