டெங்கு தடுப்பு: தேவை அரசு - மக்கள் இணக்கம்!

By செய்திப்பிரிவு

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பரவலாகப் பெய்துவருகிறது. இதனால் மழைக்கால நோய்கள் பரவும் அபாயமும் இருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவிவருவது கவனத்துக்குரியது. ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் வரை 3,396 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. செப்டம்பரில் 572 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபரில் பாதிப்பு 616 ஆக அதிகரித்துள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில் டெங்குவால் ஏற்படும் இறப்பு அதிகரித்துவரும் நிலையில், அதற்கு அருகே இருக்கும் இந்திய மாநிலமான மேற்கு வங்கத்திலும் அக்டோபரில் மட்டும் 800 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இந்தியாவில் 2021இல் சுமார் இரண்டு லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்; 2017-க்குப் பிறகு, இதற்குப் பலியானோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 300ஐக் கடந்தது. இந்த ஆண்டு செப்டம்பர் 31 வரையிலான புள்ளிவிவரங்களின்படி, இந்திய அளவில் 63,280 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10,000-க்கும் அதிகமான பாதிப்புகளுடன் தெலங்கானா முதலிடத்தில் உள்ளது; அதற்கு அடுத்தபடியாக கர்நாடகம் உள்ளது. 4,000-க்கும் அதிகமான பாதிப்புகளுடன் தமிழ்நாடு, மகாராஷ்டிரம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 4,000-க்கும் குறைவான பாதிப்புகள் இருந்தபோதும் இறப்பில் கேரளம் (20 பேர்) முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இறப்பு விகிதத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளன; இது நல்ல அறிகுறி இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

தொழில்நுட்பம்

48 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்