இந்திய - இலங்கை எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் நிகழ்வாகியுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் நிகழ்த்தப்படும் தாக்குதல்களைத் தாண்டி, இப்போது இந்தியக் கடற்படையினரும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் படகுகளில் இந்திய தேசியக் கொடி கட்டப்பட்டிருந்தபோதும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் எனச் சந்தேகித்திருந்தாலும் எல்லை தாண்டும் மீனவர்களைச் சுடுவதைச் சர்வதேசச் சட்டங்கள் அனுமதிப்பதில்லை என்பதும் கவனம்கொள்ளத்தக்கது. 2017இல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் ஒவ்வொரு முறையும் ‘எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள்’ என்று சொல்லப்படுகிறது. இதற்கான பின்னணி நீண்ட வரலாறு உடையது. மீன்வளம் அதிகம் உள்ள இந்திய-இலங்கைக் கடற்பகுதியின் உரிமை யாருக்கு என்பது, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே சர்ச்சைக்கு உரியதாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்த காலகட்டத்தில் கச்சத்தீவு உரிமை குறித்துத் திட்டவட்டமாக எதுவும் வரையறுக்கப்படவில்லை. அதனால் அதற்குப் பிறகும் இந்நிலை தொடர்ந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
35 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
51 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
56 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago