போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநில நெடுஞ்சாலைகளைக் கையகப்படுத்தி, அவற்றை மேம்படுத்தும் திட்டம் குறித்து மத்தியத் தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். இந்தச் சாலைகளை நான்கு அல்லது ஆறு வழிச் சாலைகளாக விரிவுபடுத்தி, 25 ஆண்டுகளுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் பின்னர் அந்தச் சாலைகள் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இதில் இடப்படும் முதலீட்டை 12, 13 ஆண்டுகளில் திரும்பப் பெற்றுவிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சாலைப் போக்குவரத்தையே மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். சாலை வழியாகவே சரக்குப் போக்குவரத்தும் அதிகம் நடைபெறுகிறது. தொழில் வளர்ச்சிக்கும் சாலைப் போக்குவரத்து முக்கிய ஆதாரமாக உள்ளது. எனவே, நெரிசலற்ற, மேம்பட்ட சாலை உள்கட்டமைப்பு அவசியமாகிறது. இது துரிதப் போக்குவரத்துக்கும் உதவும். இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் கடந்த 20 ஆண்டுகளில் மேம்பட்ட வடிவத்தை அடைந்திருக்கின்றன; ஆனால், இந்தியாவின் மொத்த சாலைகளில் இது 2.1% மட்டுமே. எஞ்சியவை பெரும்பாலும் மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ்தான் வருகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
40 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago