அம்பேத்கர் புகழ் பேசும் ஒரு மைல்கல் தீர்ப்பு!

By செய்திப்பிரிவு

தேனி சட்டக் கல்லூரி மாணவர் தொடுத்திருந்த வழக்கொன்றில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், அரசமைப்பின் முதன்மைச் சிற்பியான பி.ஆர்.அம்பேத்கரைப் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துகளும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அவரது உருவப்படம் இடம்பெற வேண்டும் என்று பிறப்பித்திருக்கும் உத்தரவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

கல்லூரி முதல்வரின் அறையில் அம்பேத்கரின் உருவப்படம் இடம்பெற வேண்டும், தமிழ்வழியில் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்று சட்டக் கல்லூரி மாணவர், கல்லூரி நிர்வாகத்திடம் கோரியுள்ளார். அவரது அணுகுமுறையில் இருந்த தவறுகளைச் சுட்டிக்காட்டிய கல்லூரி நிர்வாகம், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அம்மாணவர் தனக்காக வாதிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின்போது, குறிப்பிட்ட அம்மாணவர் தனது தவறுகளுக்கு மன்னிப்புக் கோரி கல்லூரி நிர்வாகத்திடம் கைப்பட மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியதோடு, கல்லூரி நிர்வாகம் உடனடியாக அம்பேத்கரின் உருவப்படத்தை நிறுவி, அதை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியும் உயர் நீதிமன்றம் இவ்வழக்கின் விசாரணையை அதற்கடுத்த இரண்டாம் நாளுக்குத் தள்ளிவைத்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

59 mins ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்