அதிகரித்துவரும் பணவீக்கம்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் பணவீக்கம் முன்னெப்போதைக் காட்டிலும் படுமோசமான நிலையை எட்டியுள்ளது. ஏற்கெனவே, சில்லறை விலை பணவீக்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஏப்ரலில் மொத்த விலை பணவீக்கம் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 14.55% ஆக இருந்த மொத்த விலை பணவீக்கம் ஏப்ரலில் 15.08% ஆக அதிகரித்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து 13 மாதங்களாக இரட்டை எண்களில் தொடர்கிறது. இந்தப் பணவீக்கத்துக்கு விற்பனைப் பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துவருவதே காரணம். மொத்த விலை பணவீக்கம் அதிகரித்தால் அதன் தொடர்ச்சியாக சில்லறை விலை பணவீக்கமும் அதிகரிக்கக்கூடும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெருந்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், சந்தைக்குத் தேவையான உற்பத்திப் பொருட்கள் அளிப்பதில் தேக்கநிலை நிலவிவந்தது. பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தாக்குதலைத் தொடங்கிய பிறகு, இந்நிலை இன்னும் சிக்கலாகியுள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 38.86% வரையிலும் உயர்ந்துள்ளது. இதையொட்டி, மேலும் சில மாதங்களுக்கு விற்பனைப் பண்டங்களின் விலை உயர்வு இரட்டை இலக்க சதவீதத்தில் தொடரும். எனவே, வருகின்ற ஜூன் மாதம் கூடவிருக்கும் ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கி அவ்வாறு முயற்சி எடுத்தாலும்கூடப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையை எதிர்கொண்டிருக்கிறோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்