இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாகப் பணி உயர்வு பெறுவதற்கு அனைத்துத் துறை அலுவலர்களையும் பரிசீலிக்கும்வகையில், தமிழ்நாடு ஆட்சிப் பணிகள் துறை ஒன்றை நிறுவ சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, ஆட்சிப் பணித் துறை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கொள்ளத்தக்கது. ஊரக மேம்பாடு மற்றும் உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் 98 அதிகாரிகள் 2012-ல் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
இதுவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று, துணை ஆட்சியராகப் பணியில் சேர்பவர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு ஐஏஎஸ் பணி உயர்வு வழங்கப்பட்டுவருகிறது. அதேபோல, அத்தேர்வில் வெற்றிபெற்றுக் காவல் துறைத் துணை கண்காணிப்பாளராகப் பணியில் சேர்பவர்கள், இந்தியக் காவல் பணி அதிகாரிகளாகப் பணி உயர்வைப் பெறுகிறார்கள். ஆனால், குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று வணிக வரித் துறை உதவி ஆணையராக, கூட்டுறவுச் சங்கங்களின் உதவிப் பதிவாளராக, ஊரக மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநராக, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையில் மாவட்ட அலுவலர்களாகப் பணியாற்றுபவர்கள், தம் பணிக் காலத்தில் தம் துறைசார்ந்து பதவி உயர்வுகளைப் பெற முடியுமேயொழிய, ஐஏஎஸ் பணி உயர்வைப் பெறுவதென்பது அரிதினும் அரிதாகவே இருந்துவருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
35 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
1 hour ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago