தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதம் கொந்தளிப்பான ஒரு மாதமாகக் கடந்திருக்கிறது. முதல் வாரத்தில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்ட நிலையில், மூன்றாம் வாரத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக, 39 இடங்களில் ‘அதி கனமழை’ பதிவானது. காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழையும், எட்டு இடங்களில் 50 செ.மீ. மழையும் பதிவானது.
2021 நவம்பர் 7 அன்று சென்னையில் அதிகாலையில் பெய்த 21 செ.மீ. மழை, அதே ஆண்டு டிசம்பர் 30 அன்று ஒருசில மணி நேரத்தில் 15 செ.மீ-க்கு மேல் பெய்த மழை, 2023 அதி கனமழை உள்ளிட்ட சமீபகால நிகழ்வுகள், வானிலை முன்னறிவிப்பிலும், பேரிடர் மேலாண்மையிலும் நிலவும் போதாமையைச் சுட்டுகின்றன. தமிழ்நாட்டைத் திகைக்கச் செய்த தற்போதைய மழையின் அளவு-விரிவு குறித்து வானிலை ஆய்வு மையம் ஏன் துல்லியமாகத் தெரிவிக்கவில்லை என்கிற கேள்வி புறக்கணிக்க முடியாதது. டிசம்பர் 14 முதல் 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் (24 மணி நேரத்தில் 21 செ.மீ.க்கு மேல் மழை) என்று எச்சரிக்கை விடுத்திருந்ததாக வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
11 mins ago
சினிமா
15 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
29 mins ago
இந்தியா
19 mins ago
சினிமா
37 mins ago
இந்தியா
51 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago