ஈழத் தமிழரின் அடையாளமாகவும் பண்பாட்டுச் சக்தியாகவும் நெடிய வரலாற்றில் இடம்பிடித்தவர் ஆறுமுக நாவலர். ‘சைவமும் தமிழும்’ என்ற அவரது மாபெரும் கோஷத்தின் பின்னால் உருத்திரண்டிருந்த நாவலரது இயக்கம், யாழ்ப்பாணத்தில் நிலவிய ஆங்கிலேயே ஆட்சிக்கும் மேலைத்தேய மயப்படுத்தலுக்கு எதிராகவுமே இருந்தது. அதாவது, காலனியவாதிகளின் மதமாற்றக் கோட்பாட்டையும் பாதிரிமார்களை முழுமுதலாய்க் கொண்ட கல்விமுறையையும் நாவலர் கடுமையாக எதிர்த்து நின்றார். அதன் பொருட்டு, நாவலரின் இயக்கம் ஒரு எதிர்ப்பியக்கமாகத் தன்னை வெளிப்படுத்தியது.
நாவலரது எதிர்ப்பியக்கம்: காலனிய வன்கவர் சக்திகளிடம் ஈழத்தின் பண்பாட்டைச் சிதையவிடாது அரணாக நின்ற நாவலரது போராட்டத்தை இக்கணம் நன்றியுடன் நினைத்து அவர் தாள் பணிகிறேன். “துப்பாக்கிகளாலும் பீரங்கிகளாலும் கைப்பற்ற முடியாத ஒரு தேசத்தை, கரும்பலகைகளாலும் வெண்கட்டிகளாலும் அபகரித்திருக்கிறார்கள்” என்ற இந்த வாக்கியத்தை ஆப்பிரிக்க எழுத்தாளர் கூகி வா தியாங்கோ தன்னுடைய ‘அடையாள மீட்பு’ எனும் நூலில் எழுதியிருக்கிறார். ஆப்பிரிக்க நிலத்தின் பண்பாட்டை மட்டுமல்லாது, அவர்களது தாய்மொழியையும் அழித்த காலனியவாதிகளிடமிருந்து ஈழத்தின் பண்பாட்டையும் தமிழையும் சைவத்தையும் காப்பாற்றிய சுதேசப் பண்பாட்டுத் தலைமையே நாவலர் ஆவார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
வணிகம்
11 mins ago
வாழ்வியல்
7 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
ஆன்மிகம்
25 mins ago
விளையாட்டு
30 mins ago
கருத்துப் பேழை
5 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago