தொடக்க காலப் பெண் கதைகள் காட்டும் வேறு உலகம்

By சுப்பிரமணி இரமேஷ்

அம்பையின் ‘மானுடம் வெல்லும்’, அ.வெண்ணிலாவின் ‘மீதமிருக்கும் சொற்கள்’, அரவிந்த் சுவாமிநாதனின் ‘விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2’ ஆகிய பெண் சிறுகதைகள் அடங்கிய தொகை நூல்களின் வழியாக ஐம்பதுகளுக்கு முந்தைய பெண் சிறுகதைகளின் தன்மைகளை மதிப்பிடலாம். வடிவ உணர்வு குறித்த சிந்தனை ஐம்பதுகளுக்கு முன்பு எழுதிய பெண் எழுத்தாளர்களிடம் இல்லாமைக்கு, அவர்கள் வளர்ந்த சூழலும் குறுகிய வெளியுலகத் தொடர்புகளும் எனப் பல காரணங்கள் உண்டு. வி.விசாலாக்ஷி அம்மாள், கி.சாவித்திரி அம்மாள், அம்மணி அம்மாள், வை.மு.கோதைநாயகி, எஸ்.கமலாம்பாள், கு.ப.சேது அம்மாள், எஸ்.அம்புஜம்மாள், குகப்ரியை, ஸி.ஆர்.ஸரோஜா, கி.சரஸ்வதி அம்மாள், குமுதினி, சரோஜா ராமமூர்த்தி உள்ளிட்ட பல பெண் எழுத்தாளர்களின் வாழ்க்கைச் சூழல்கள் ஒன்றுபோலவே இருந்திருக்கின்றன. பெண் எழுத்தாளர்கள் பலருக்கும் இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது. அவர்கள் தம் கணவரின் ஆதரவுடன் கல்வி கற்றிருக்கின்றனர்; அவர்களது வழிகாட்டுதலில் சிறுகதைகளை எழுதியிருக்கின்றனர்.

தொடக்க காலக் கதைகளில் கற்பிதங்கள்: தொடக்க காலப் பெண் எழுத்தாளர்கள் கணவனுக்குத் தொண்டு செய்வதையே தமக்குக் கிடைத்த வரமாகக் கருதியிருக்கின்றனர்; இதனைத் தம் எழுத்திலும் பிரதிபலித்திருக்கின்றனர். பெண்கள் தியாக மனப்பான்மை கொண்டவர்கள்; கணவருக்காக எதையும் செய்யத் துணிபவர்கள். ஆண்கள் அறிவாளிகள்; முற்போக்குச் சிந்தனை உடையவர்கள் என்பது போன்ற தன்மைகளில் கதைகள் எழுதப்பட்டுள்ளன. இந்தியக் குடும்ப மரபு ஆண்களை மையப்படுத்தியுள்ளது. இந்த மையத்துக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் தாங்கள்தான் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம், இவ்வெழுத்தாளர்களின் மனதில் ஆழமாகப் படிந்திருப்பதை அவர்களது பிரதிகளின் வழியாக அறிய முடிகிறது. ஆண்களின் அதிகார மனநிலையையோ அல்லது பெண்களுக்கு எதிரான தொல்மரபுகளையோ விமர்சித்து எழுதினால் சமூகம் ஏற்காது என்ற மனநிலை பல பெண் எழுத்தாளர்களிடம் இருந்ததையே இதுபோன்ற சிறுகதைகள் சுட்டுகின்றன. சில கதைகளில் பெண்கள் தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த வீட்டைவிட்டு வெளியேற நினைக்கிறார்கள். ஆனால், அவர்களால் அதனைச் செய்ய முடியவில்லை. பெண்களுக்குள் படிந்துள்ள ‘குடும்பம்’ என்கிற கூட்டுணர்வு மீண்டும்மீண்டும் அவர்களைப் பழைய வாழ்க்கைக்கே இழுக்கிறது. பெண்களே பணிந்து போக வேண்டும்; அதுவே அவர்களுக்குப் பெருமைதரும் செயலாகும் என்ற பிரச்சாரத்தைப் பெண்களே முன்னெடுத்துள்ளனர். ஆங்காங்கே சில விதிவிலக்குகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஒட்டுமொத்தமாக, கணவனின் இருப்பைக் கடவுளின் இடத்துக்கு நகர்த்தும் வேலையையே இவர்களது கதைகள் செய்திருக்கின்றன. எவ்வளவு உன்னதமான கணவன்மார்கள் ஐம்பதுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கிறார்கள் என்ற வாசிப்பையே இக்கதைகள் தருகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்