கவிஞர் நாரணோ ஜெயராமன் கடந்த வாரம் சென்னையில் காலமாகிவிட்டார் (77). தமிழ்க் கவிதை உலகில் உத்வேகமாக இளைஞர்கள் கவிதை எழுதப் புறப்பட்ட 70-களில் கவிதை உலகுக்கு அறிமுகமானவர் இவர். அந்தக் காலகட்டக் கவிதைகளின் அக நெருக்கடிகளையே இவரது கவிதைகளும் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. இவரது கவிதைகளின் தொகுப்பை ‘வேலி மீறிய கிளை’ எனும் தலைப்பில் க்ரியா பதிப்பகம் 1976இல் வெளியிட்டது.
வல்லிக்கண்ணனுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்றுத் தந்த ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ நூலில் நாரணோ ஜெயராமன் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேராசிரியர் ஆல்பர்ட், சுந்தர ராமசாமி போன்ற ஆளுமைகள் பலரும் இவரது கவிதைகள் குறித்து எழுதியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமியின் ‘பல்லக்குத் தூக்கிகள்’ தொகுப்புக்கு இவர்தான் முன்னுரை. கவிஞர் பிரமிள் இவரது கவிதைகளுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒதுங்கியிருந்தவர். இவரது கவிதைகளை வைத்து நடந்த விவாதங்களில் பிரமிள் உட்படப் பலரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இவர் அதற்கெல்லாம் வெளியே இருந்தவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 mins ago
தொழில்நுட்பம்
59 mins ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
இந்தியா
4 hours ago