மருத்துவர்கள் கோரிக்கை: அரசு செவிசாய்க்குமா?

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் ஊதியம், மத்திய அரசு, பிற மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைக் காட்டிலும் மிகவும் குறைவாக இருப்பதாக அரசு மருத்துவர்கள் கடந்த சில ஆண்டுகளாகப் போராடிவருகின்றனர். 2019இல் அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தியபோது, நேரில் வந்து ஆதரவு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்ததும் அரசாணை 354இன்படி அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது வெளியிடப்பட்ட அரசாணை 354இன்படி, அரசு மருத்துவர்களில் 12 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவருக்கு ஊதியப்பட்டை நான்கு தரப்பட வேண்டும். அதை 2017ஆம் ஆண்டு முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தி, அதற்கான பணப் பலன்கள் (Arrears) தரப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு 2021இல் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அரசு மருத்துவர்களுக்கு ஏற்கெனவே 20 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு கிடைத்திடும் வகையில் காலம் சார்ந்த ஊதியம் (DACP) வழங்கப்படுவதாகவும், ஊதியப்பட்டை நான்கை முன்னதாகவே (Compression of years) தருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

5 mins ago

இந்தியா

7 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

35 mins ago

வணிகம்

54 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்