வளர்ச்சிக்குத் தேவை மாவட்டத் திட்டக் குழுக்கள்

By செய்திப்பிரிவு

நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. மத்திய-மாநில அரசுகளின் வளர்ச்சி, நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் உள்ளாட்சி அமைப்புகள் பெரும் பங்காற்றிவருகின்றன. அவற்றில் உள்ளாட்சிகளின் அடிப்படைத் தேவைகளுக்கான பணிகளும் அடக்கம். என்றாலும் உள்ளூர் அளவில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் உள்ளாட்சிகள் தன்னிறைவு பெற்றுவிட்டனவா என்று கேட்டால், முழுமையாக இல்லை என்பதே பதில்.

நிதிப் பற்றாக்குறை போன்ற பல காரணங்களால் பெரும் தொய்வு கண்டிருந்த உள்ளாட்சி நிர்வாகங்கள், அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 73, 74ஆவது திருத்தங்களின்படியான தொடர் நடவடிக்கைகளுக்குப் பின் புத்துணர்வுபெற்று புதிய ஆற்றலுடன் செயல்பட்டு வருகின்றன என்பது வெளிப்படை. ஆனாலும், அரசமைப்புச் சட்டத் திருத்தங்களின்படி உட்சேர்க்கப்பட்ட கூறுகள் அனைத்தும் முறையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டனவா என்பதற்கும், முழுமையாக இல்லை என்ற அதே பதிலைத்தான் நாம் மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மத்திய-மாநில அரசின் நிதிப் பகிர்வுகள், மாநிலத் தேர்தல் ஆணையம், மாநில நிதிக் குழு உருவாக்கம், கிராம சபைகள் உருவாக்கம் ஆகியவை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன எனப் பெருமிதத்துடன் கூறப்படுகிறது. அதேவேளையில், உள்ளாட்சிப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி குறித்த திட்டமிடுதல் குறித்து அரசு, உள்ளாட்சிகளுக்கு அரசமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கடமை, பொறுப்புகளை நிறைவேற்றிடத் தேவையான வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்ற நிதர்சனமும் கண்முன்னே நிற்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்