இடையிலாடும் ஊஞ்சல் - 1: தமிழுக்குத் தாய்மொழி எது?

By ச.தமிழ்ச்செல்வன்

“எல்லா மொழிகளுக்கும் தாய் சம்ஸ்கிருதம்தான். ஆகவே, அம்மொழியைத் தேசிய மொழியாக அறிவிக்குமாறு நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று தொடுக்கப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு சமீபத்தில் தள்ளுபடி செய்தது. வழக்குத் தொடுத்தவர் குஜராத்தின் முன்னாள் கூடுதல் செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.ஜி.வஞ்சாரா என்பவர்.

இந்தக் குரல் ஒன்றும் புதிதல்ல. நூற்றாண்டுகள் தாண்டியும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் குரல்; சங் பரிவாரங்கள் நீண்ட காலமாக எழுப்பிக்கொண்டிருக்கும் குரலும்தான். சம்ஸ்கிருதம் இந்தியாவில் புழங்கும் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்கிற கருத்தாக்கம் காலனிய காலத்தில் உருவாகி வலுப்பெற்ற ஒரு கற்பிதம். 1757 பிளாசி போருக்குப் பின் வங்காளத்தில் வரி வசூலிக்கும் உரிமையைப் (திவானி) பெற்ற ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஆட்சிசெய்யத் தலைப்பட்டனர். மக்களை ஆள வேண்டுமெனில் அவர்களின் மொழிகளின் மீது தமக்கு ஆளுமை வேண்டும் என்பதை ஐரோப்பியர்கள் உணர்ந்திருந்தனர். மொழிபெயர்க்கும் துபாஷிகளை முழுமையாக நம்ப முடியாது என்கிற அனுபவத்தில், இந்திய மொழிகளைத் தாமே கற்க முறையான ஏற்பாடுகளைச் செய்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

14 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

55 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்