தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் - 25 | ஒரு ‘எஸ்தப்ப'னின் வாசிப்பு அனுபவம்

By ஜி.குப்புசாமி

அருந்ததி ராயின் ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ (The God of Small Things), கேரளத்தில் அய்மனம் என்ற கிராமத்தில் நடைபெறுகிறது. மீனச்சல் என்ற காட்டாறு நாவலின் கதாபாத்திரமாகவே வருகிறது. துயரார்ந்த சம்பவங்களுக்கு இந்த ஆறு சாட்சியாக இருக்கிறது. சிலவற்றில் பங்கெடுத்துக்கொள்ளவும் செய்கிறது. துர்நிகழ்வுகளுக்குப் பிறகு நாவலின் முக்கியக் கதாபாத்திரமான எஸ்தா என்கிற எஸ்தப்பன், கல்கத்தாவில் உள்ள அவனுடைய அப்பாவிடம் போய்ச்சேர்வதற்கு மெட்ராஸ் மெயிலில் தனியாக அனுப்பிவைக்கப்படுகிறான். 23 வருடங்கள் கழித்து அய்மனத்துக்கே திருப்பி அனுப்பப்படுகிறான். அவனைப் பல வருடங்கள் கழித்துச் சந்திக்கும் அவனுடைய இரட்டைச் சகோதரி ராஹேலுக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிருக்கிறான். உருவத்தில் அல்ல, இயல்பில்.

ஆனால், 25 வருடங்கள் கழித்து இக்கதையைத் திரும்பப் படிக்கும்போது, முதல் வாசிப்பு பயணித்த அதே அலைவரிசை சற்றும் பிறழாமல் இருக்கிறது எனக்கு. இந்நாவலை உலகத்திலேயே அதிக முறை படித்தவன் என்றும், எஸ்தாவின் இணைப்பிரதி நான்தான் என்றும் நினைத்துக்கொண்டிருந்த எனக்கு, இது வியப்பை உண்டாக்கவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

43 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்