நல விடுதிகள்: அவலம் தீர்க்கப் புறப்பட்ட அரசு!

By நா.மணி

ஒரு நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரை, அதே நாளிதழில் மீண்டும் ஒரு நடுப்பக்கக் கட்டுரையை எழுதத் தூண்டும் அளவுக்கு வினையூக்கியாகச் செயல்பட்டிருக்கிறது. ‘ஆதிதிராவிடர் நல விடுதிகள்: அவலம் தீர்க்குமா அரசு?’ என்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் 25.02.22 அன்று நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாகப் பல கடிதங்கள் வந்தன. இத்துறை நடத்தும் பெண்கள் விடுதி மாணவிகள் கூட்டாக ஒரு கடிதம் எழுதினார்கள்.‌ உணவின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், சாம்பார் வடிநீர்போல் இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர். ரேஷன் அரிசிக்குப் பதிலாக நல்ல அரிசிச் சோறு போட்டால் நல்லது என்றனர்.

ஒரு மாவட்டத்தின் ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர், ‘எங்கள் மாவட்டத்தில் போலிக் கணக்குகள் கருவூல அளவில் கண்டுபிடிக்கப்பட்டு, பலர்மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ என்று சுட்டிக்காட்டியிருந்தார். இத்துறை விடுதியில் இருக்கும் காப்பாளர் ஒருவரே, கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அனைத்தும் உண்மை என்று கூறி, அதனையும் தாண்டி அங்கு நடக்கும் தவறுகளைப் பட்டியலிட்டு, ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். ‘அரசும் மக்களும் இந்தக் கட்டுரையை வாசித்திருப்பார்கள். நிச்சயமாக நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புவோம்’ என்று அவர் அந்த மின்னஞ்சலை முடித்திருந்தார். அக்காப்பாளரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு அரசின் செயல்பாடுகள் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்