சாதிச் சான்றிதழுக்காகப் பழங்குடியினர் மரப்பொந்திலா வசிக்க வேண்டும்?

By ஜி.ராமகிருஷ்ணன்

பழங்குடியினருக்கு அரசமைப்பு வழங்கிடும் பல உரிமைகள் நடைமுறையில் அதிகாரவர்க்கத்தால் மறுக்கப்படுகின்றன. ‘ஜெய்பீம்’ திரைப்படம் பழங்குடியினர் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளைப் பேசியதன் விளைவாகத் தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடியினரின் கோரிக்கைகளான, இலவச வீட்டுமனைப் பட்டா, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட சில பிரச்சினைகள் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்த்து, அதிகாரிகள் பழங்குடியினர் வசிப்பிடங்களுக்குச் சென்று அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவருகின்றனர்.

குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் வீரகநல்லூர் கிராமத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 30 இருளர் பழங்குடியினக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதுடன், அவர்களுக்கு 6 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து, அவர்களுக்கென்று சொந்தமாகச் செங்கல் சூளை அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய-மாநில அரசின் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றையும் நலத்திட்டங்களையும் பெறுவதற்குப் பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் அவசியமான ஒன்று. தமிழ்நாட்டில் அனைத்துப் பழங்குடிகளும் சந்தித்துவரும் ஒரு அவலம் சாதிச் சான்றிதழ் பெறுவது. பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பதால், அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, வனஉரிமைச் சட்டத்தின் கீழ் நில உரிமை, பழங்குடியினர் நலவாரியத்தின் பல்வேறு நலத்திட்டங்கள் போன்றவற்றைப் பெற முடியாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்