இந்தியாவில் தேர்தல் திட்டமிடுதலுக்கு புகழ்பெற்ற ஐ-பேக் என்ற அமைப்பின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்ய எடுத்த முயற்சி தான் சமீபத்திய அரசியல் பரபரப்பாகும். எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் விழுந்துகிடக்கும் குதிரையாக உள்ள காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்தி, அசுர பலத்துடன் ஆட்சியில் உள்ள பாஜக-வை வீழ்த்தும் சக்தியாக மாற்றிக் காட்ட முடியும் என்று பிரசாந்த் கிஷோர் நம்பிக்கை விதைத்து காய்களை நகர்த்தினார்.
இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் 85 பக்க செயல்திட்டம் ஒன்றை அவர் அளித்தார். நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக ஒருகாலத்தில் திகழ்ந்த காங்கிரஸ் கட்சி அதளபாதாளத்திற்கு சரிந்தது எப்படி? அக்கட்சி தற்போது சந்தித்துவரும் பிரச்சினைகள், அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த தேவையான மாற்றங்கள், மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள், கூட்டணி தந்திரங்கள், வரும் தேர்தலில் வெற்றிக்கனியை பறிப்பதற்கு தேவையான உத்திகள் என விரிவான ‘மாஸ்டர் பிளான்’ அந்த செயல்திட்டத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago