தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, ‘‘படத்தில் இடம்பெற்ற காட்சிகள் யாவும் என் மனதைக் கனமாக்கி, இரவுப் பொழுதைப் பகல் பொழுதாக்கித் தூக்கத்தைப் போக்கிவிட்டன’’ என எழுதியதோடு, தனக்குக் காவல் துறையால் இழைக்கப்பட்ட அநீதியையும் மனித உரிமை மீறலையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
‘‘காவல் நிலையம் ஒன்றில் நடந்த இதே போன்ற தாக்குதல்தான், சென்னை மத்திய சிறையில் 1976-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் நாள் இரவு எனக்கும் நடந்தது. என்மீது விழுந்த பல அடிகளைத் தாங்கியவர் சிட்டிபாபு. அதனால் அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்ரவதைகளை ‘சிறை டைரி’யாக சிட்டிபாபு எழுதியுள்ளார். இந்த நினைவுகள் அனைத்தும் நேற்று ‘ஜெய்பீம்’ பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது என் மனக்கண் முன் நிழலாடியது’’ என உணர்வுபூர்வமாக எடுத்துரைத்திருந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
க்ரைம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஓடிடி களம்
12 hours ago