சமூக வலைதளம் அதகளப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட தமிழணங்கின் ஓவியம்தான் இப்போது பேசுபொருள். அந்த அணங்கின் நிறம் கறுப்பு. அவள் கையில் தமிழாயுதம். முகத்தில் சினம். விரிந்த கூந்தல். தாண்டவக் கோலம். படம் வைரலானது. ரஹ்மான் படத்தைப் பதிவிட்ட நேரமும் அதற்கொரு காரணம். கடந்த வாரம்தான் (7.4.22) ஒன்றிய அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை இந்தியாவின் இணைப்பு மொழி ஆக்க வேண்டும் என்று பேசினார். அதையொட்டி அமைந்துவிட்டது ரஹ்மானின் பதிவு. நெட்டிசன்கள் பலரும் தமது இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்த அந்த ஓவியத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.
எனினும் விமர்சனங்களுக்கும் குறைவில்லை. தமிழணங்கின் முகத்தில் தெய்வாம்சம் இல்லை, படம் அலங்கோலமாக இருக்கிறது என்றார் ஒரு தமிழறிஞர். தமிழ்த்தாய் அழகானவள், ஆனால் படம் அகோரமாக இருக்கிறது, ஆகவே இதை வரைந்தவர் வக்கிர புத்தி உள்ளவராகத்தான் இருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தவர் ஓர் அரசியல் விமர்சகர். அவர் குறிப்பிடும் ஓவியர் சந்தோஷ் நாராயணன் இந்த ஓவியத்தை வரைந்தது 2019-ல், இதே போன்ற இந்தி மொழிச் சர்ச்சை ஒன்றுக்கு இடையில்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஆன்மிகம்
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago