1991 பிப்ரவரியில் இந்திய அரசின் பொருளாதார ஆலோசகர் தீபக் நய்யாரைச் சந்தித்தார் மணி சங்கர் ஐயர். “நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருக்கிறது, வெளிநாட்டுக் கடன்களுக்குத் தவணை கட்டுவதற்குக்கூட இயலாத நிலை காணப்படுகிறது” என்று ஐயரிடம் கவலை தெரிவித்தார் நய்யார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராஜீவ் காந்தியிடம் இதை ஐயர் தெரிவிக்க, “உடனே பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கிடம் இதுபற்றிப் பேசுங்கள்” என்றார் ராஜீவ்.
ராஜீவுக்கு நெருக்கமான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆர்.டி. பிரதான் ஒரு தகவலை சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார். “தான் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு இருப்பதை ராஜீவ் காந்தி 1991 மே மாதம் உணர்ந்தார். புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்து நான் அவரிடம் 7 பக்க அறிக்கையை அளித்திருந்தேன். அதைப் படித்த அவர் பன்னாட்டுச் செலாவணி நிதியம், உலக வங்கி உதவியுடன்தான் பொருளாதாரத்தை மறு கட்டமைப்பு செய்ய வேண்டியிருக்கும். அதற்கான பொருளாதார வல்லுநரை அடையாளம் காண வேண்டும் என்றார். ரிசர்வ் வங்கி ஆளுநர் வெங்கிட ரமணன், ஐ.ஜி. படேல், மன்மோகன் சிங் ஆகியோரின் பெயர்கள் அவருடைய பரிசீலனையில் இருந்தன” என்று தெரிவிக்கிறார்.
நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவியேற்கவிருந்த நாளில் காலை 6.30 மணிக்கு பி.சி.அலெக்சாண்டர் புதிய அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அதில் நிதியமைச்சகப் பொறுப்பை மன்மோகன் சிங்குக்கு வழங்கலாம் என்றார். அதை உடனடியாக ஏற்ற நரசிம்ம ராவ், நிதியமைச்சகப் பொறுப்பை ஏற்குமாறு மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டார். தான் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு நரசிம்ம ராவ் துணையாக இருப்பார் என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகே மன்மோகன் சிங் அந்தப் பொறுப்பை ஏற்றார்.
- ராமசீனிவாசன், பேராசிரியர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
26 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
தமிழகம்
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
கல்வி
9 hours ago
தமிழகம்
9 hours ago