தஞ்சை இடைத்தேர்தல்: எம்ஜிஆர் எடுத்த விநோத முடிவு

By டி. கார்த்திக்

ஜனதா கூட்டணியின் சார்பில் 1977-ல் பிரதமரானார் மொரார்ஜி தேசாய். 1979-ல் தஞ்சை, நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதுவரை, இந்திரா காந்தியை ஆதரித்துவந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர், இடைத்தேர்தலில்  யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தில் இருந்தார். டெல்லி சென்று முதல்நாள் மொரார்ஜி தேசாயையும் அடுத்தநாள் இந்திரா காந்தியையும் சந்தித்தார் எம்ஜிஆர்.

தஞ்சாவூர் இடைத்தேர்தலில் இந்திராவை ஆதரிக்கப்போவதில்லை என்று அறிவித்தார். கூடவே, அதிமுக சார்பில் யாரும் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்தார். ஒரேநேரத்தில் இரண்டு தேசியக் கட்சிகளைச் சமாளிப்பதற்காக அப்படியொரு முடிவை எடுத்தார் எம்ஜிஆர். கடைசியில், தஞ்சாவூர் இடைத்தேர்தலில் அதிமுகவின் ஆதரவோடு காங்கிரஸ் வென்றது. நாகப்பட்டினத்தில் திமுக ஆதரவோடு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வென்றது. தஞ்சையில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், நாகையில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும் வெற்றிவாய்ப்பை இழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

விளையாட்டு

19 mins ago

இந்தியா

45 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்