சென்னை விமான நிலையத்தில் வணிக வளாகம், மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்கம், தங்கும் விடுதி ஆகியவற்றை உருவாக்கும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அனுமதி வழங்கியிருக்கிறது.
2,000 கார்களை நிறுத்தும் அளவுக்கு வசதி கொண்ட ஆறு அடுக்கு வாகன நிறுத்துமிடத்தின் ஒரு பகுதியாக இவையும் இடம்பெறும். பயணிகள் மட்டுமல்லாமல் பிறரும் இவற்றைப் பயன்படுத்தலாம். விமான நிலைய மெட்ரோ நிலையத்தின் கிழக்குப் பகுதியில் வணிக வளாகமும் திரையரங்கும் இடம்பெறவிருக்கின்றன. மேற்குப் பகுதியில் தங்கும் விடுதி அமைக்கப்படும். வாகன நிறுத்துமிடத்திலிருந்து விமான நிலையக் கட்டிடத்துக்குச் செல்ல பாலமும் கட்டப்படவிருக்கிறது. மொத்தம் ரூ.250 கோடி மதிப்பில் இந்தப் பணிகள் 2020 ஜூலையில் முடிவடையும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
ஜோதிடம்
39 mins ago
ஜோதிடம்
54 mins ago
ஜோதிடம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago