அஞ்சலி: பங்கஜ் உதாஸ் | தாயின் கண்ணீரில் நனைந்த கடிதம்

By வெ.சந்திரமோகன்

தொண்ணூறுகளில் இசைத் தொலைக்காட்சி சேனல்களில் இந்தித் தனிப்பாடல் தொகுப்புகள் இசை ரசிகர்களை வசீகரித்துக்கொண்டிருந்த தருணத்தில், ‘அவுர் ஆஹிஸ்தா’ என்னும் பாடல் தனித்த கவனம் பெற்றது. நடிகை சமீரா ரெட்டியும், ஒரு வெள்ளையின இளைஞரும் நடித்திருந்த அந்த மென்மையான காதல் பாடல், இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் பிரபலம். அந்தப் பாடலைப் பாடிய கஸல் பாடகர் பங்கஜ் உதாஸ், பிப்ரவரி 26இல் மும்பையில் காலமானார்.

‘ஆஹிஸ்தா’ பாடலுக்கு முன்பே பங்கஜ் உதாஸின் இன்னொரு பாடல் இந்தியா முழுவதும் பிரபலமானது. அது மகேஷ் பட் இயக்கிய ‘நாம்’ (1986) திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘சிட்டி ஆயீ ஹை’ எனத் தொடங்கும் பாடல். ‘கடிதம் வந்திருக்கிறது’ என்பது இதன் பொருள். லக்‌ஷ்மிகாந்த் - பியாரேலால் இசையமைப்பில் உருவான அந்தப் பாடல், பங்கஜ் உதாஸுக்கு அமரத்துவத்தைப் பெற்றுத்தந்தது. பிரிவின் துயரையும், உறவுகளின் மேன்மையையும் உயிரோட்டத்துடன் பதிவுசெய்த அந்தப் பாடல் வட இந்தியக் குடும்பங்களில் ஓர் அங்கமாகவே மாறியது. இந்தப் பாடலின் காட்சி வடிவத்தில் பங்கஜ் நடித்திருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

3 mins ago

விளையாட்டு

14 mins ago

இந்தியா

22 mins ago

க்ரைம்

45 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

உலகம்

55 mins ago

கருத்துப் பேழை

8 mins ago

விளையாட்டு

1 hour ago

உலகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்