பெண்களுக்கு மாதவிடாய்க் கால விடுமுறை அறிவித்த முதல் நாடு சோவியத் ஒன்றியம். பொதுச் சமையலறை,பொதுச் சலவையகம், அரசே குழந்தைகளைப் பராமரித்தல், கருக்கலைப்புக்கு அனுமதி, விவாகரத்துஉரிமை, மாதவிடாய்க் கால விடுப்பு என நூறாண்டுகளுக்கு முன்னதாகவே குழந்தைகள், பெண்களுக்கானபல்வேறு நலச் சட்டங்கள் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டன. இதற்குப் பின்னணியில் இருந்தவர் அலெக்சாந்த்ரா கொலந்த்தாய் (Alexandra Kollontai). 1917 புரட்சிக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையில் சமூக நலத் துறை கமிசார் (அமைச்சர்) பொறுப்பை ஏற்றவர். அவரது சிந்தனையில்தான் இவை உருப்பெற்றன. கொலந்த்தாய் இல்லாமல் இவை நடந்தேறியிருக்க இயலாது.
நாடெங்கும் அப்போது இவை பற்றிய விவாதங்கள் உருவாவதற்கும் அவரே காரணகர்த்தா. ஆனால், இவற்றில் பல சட்டங்கள் 1936இல் திரும்பப் பெறப்பட்டன. அதில் மாதவிடாய்க் கால விடுப்பு என்பதும் மிக முக்கியமானது. பெண்களின் நலனுக்காக இத்தகைய சிறப்புக் கவனம் செலுத்தப்படுவது ஆண்–பெண் தொழிலாளர்களுக்கு இடையேயான ஒற்றுமையைக் குலைத்துவிடும் என்பதும், உலகப் போர், அதனால் ஏற்பட்ட பஞ்சம் போன்றவையும் இதற்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்பட்டன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
34 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
50 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
55 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago