பூமியில் கொட்டப்படும் ஞெகிழிக் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. ஆண்டொன்றில் சுமார் 350 மில்லியன் டன் ஞெகிழிக் கழிவு உற்பத்தியாகிறது. இதனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் சுற்றுச் சூழல் மாசு, இந்தியா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் அதிகரித்துவரும் ஞெகிழிப் பயன்பாடு காரணமாக, 2050இல் கடலில் உள்ள மீன்களின் அளவுக்கு நிகராக ஞெகிழிக் கழிவுகளும் இருக்கும் எனச் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். விஞ்ஞானிகளின் இக்கூற்று நிதர்சனமானால், பூமியின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மண்டலமும் பாதிப்புக்கு உள்ளாகும்.
அதிகரிக்கும் ஞெகிழிக் கழிவு: இந்தியா ஒவ்வோர் ஆண்டும் 3.4 மில்லியன் டன் ஞெகிழியை உற்பத்தி செய்கிறது. இதில் 30% மட்டுமே மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. பிற ஞெகிழிக் கழிவுகள் நிலம், நீர்நிலைகளை அடைந்து சூழல் மாசை ஏற்படுத்துகின்றன. 2015இல், ‘சயின்ஸ்’ ஆய்விதழ் நடத்திய ஆய்வில், 2010இல் மட்டும் 8 மில்லியன் டன் அளவு ஞெகிழிக் கழிவு கடலுக்குள் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இது 1961ஆம் ஆண்டு உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த ஞெகிழி அளவுக்குச் சமம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
க்ரைம்
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
5 hours ago