தமிழ் இலக்கியங்களில் சினைப்பெயராக ‘மயிர்’ என்ற சொல் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத்தில் மட்டும் அறுபத்தேழு இடங்களில் ‘உரோமம்’ என்ற பொருளிலேயே இச்சொல் வருகிறது. மயிர் என்பது முடி, அவ்வளவுதான். பெரும்பாலும் தலைவியின் அழகைத் துல்லியமாக வெளிப்படுத்தவே மயிர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் ‘மயிர்’ என்ற சொல்லுக்குப் பதிலியாக இன்று வழக்கத்தில் இருக்கும் ‘முடி’ என்ற சொல்லும் முப்பது இடங்களில் வந்திருக்கிறது. ‘மயிர்’ என்பதற்கு ‘முடி’ என்பதுதான் பொருள்; ஆனால், ‘முடி’ என்ற சொல் மயிரை மட்டுமே குறிக்காது. இடத்தைப் பொறுத்து ‘முடி’யின் பொருள் மாறும். மயிருக்கு அந்தப் பிரச்சினை இல்லை.
காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கான அரசியல் சொல்லாக மயிரைப் பயன்படுத்திக்கொண்டுவருகின்றனர். ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கிய வடிவமான தலித் இலக்கியம் இதற்கான வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது. சமூகத்தில் இழிதொழிலாக மதிப்பிறக்கம் செய்யப்பட்ட பறையடித்தல், தூய்மைப்பணி செய்தல், செருப்புத் தைத்தல், முடிவெட்டுதல், துணி வெளுத்தல், பன்றி மேய்த்தல் உள்ளிட்ட தொழில்களைச் செய்பவர்கள் இன்று படைப்பாளர்களாக உயர்ந்திருக்கிறார்கள். அவ்வகையில், நாவிதர் சமூகத்தைச் சார்ந்த இ.எம்.எஸ்.கலைவாணன், சாமான்யன், ப.நடராஜன் பாரதிதாஸ் ஆகியோர் எழுதிய ‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்’, ‘மயிர் வெட்டி’, ‘ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் மிகுந்த கவனம் பெற்றிருக்கின்றன. இக்கவிதைத் தொகுப்புகள் ‘மயிர்’ சார்ந்த பிரச்சினைகளையே பேசுகின்றன. இச்சொல்லை அவர்களுக்கான அரசியல் சொல்லாக மூவரும் உயர்த்திப் பிடித்திருக்கின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
27 mins ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago