விடுதலை வேள்வியில் திண்டுக்கல்

By செ.இளவேனில்

காலனி ஆட்சியின்போது இந்தியாவுக்குப் பணியாற்ற வந்த பிரிட்டிஷ் அதிகாரிகளில் டபிள்யூ.டபிள்யூ.ஹண்டர், ஜே.எச்.நெல்சன் என்று சிலர், வரலாற்றுத் துறைக்கு அளப்பரிய பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இந்திய வரலாற்றை எழுத அவர்களது நூல்கள் முக்கியமான சான்றாதாரங்களாக இன்றும் விளங்குகின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும், அந்த வரலாற்றுத் தொடர்ச்சி அறுந்துவிடவில்லை. ஆர்.பாலகிருஷ்ணன், மு.ராஜேந்திரன் என்று இன்னும் அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது. திண்டுக்கல்மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தமா.வள்ளலார், அந்த மாவட்டத்தைப் பற்றி வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து சமீபத்தில் நூலாக்கியிருப்பதோடு, அந்நூல் முழுவதையும் ஓவியங்களாலும் புகைப்படங்களாலும் பலவண்ண அச்சில் அணி செய்திருக்கிறார்.

திண்டுக்கல் மலைப் பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்ட வரலாற்றுடன் இந்நூல் தொடங்குகிறது. ஜே.எச்.நெல்சன் எழுதிய ‘மதுரா மேனுவல்’ தொடங்கி 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்புவரை தொல்லியல் கையேடுகள், தல வரலாறுகள், பயணக் குறிப்புகள், நாளிதழ்க் கட்டுரைகள் என்று பல்வகைப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சான்றுகளின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வரலாறு எழுதியலிலும் பண்பாட்டு மானிடவியலிலும் மா.வள்ளலாருக்குள்ள நவீன பார்வை மட்டுமின்றி சங்க இலக்கியங்களில் அவருக்குள்ள தோய்வும் இந்நூலெங்கும் வெளிப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளவற்றில் காலத்தால் முற்பட்ட தாண்டிக்குடி மட்கலன்கள், குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் குன்றங்கள் என்று தொல்லியல், சூழலியல் குறித்து தற்போது எழுந்துள்ள ஆர்வங்களையும் இந்நூல் உள்ளடக்கியிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

36 mins ago

உலகம்

7 mins ago

விளையாட்டு

27 mins ago

உலகம்

34 mins ago

க்ரைம்

40 mins ago

வணிகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்