தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களோடு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை அண்மையில் நடத்தினார். எல்லா பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் துணைவேந்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு மொழிக்கும் மாநில அளவிலான ஒரு குழு பாடத்திட்டத்தை வகுத்துத் தரும். பல்கலைக்கழகங்கள் அந்தப் பாடத்திட்டத்தை அப்படியே பயிற்றுவிக்க வேண்டும். அறிவியல் போன்ற இதர பாடங்களுக்கு வகுக்கப்படும் பாடத்திட்டங்களை முக்கால் பங்கு அவற்றில் உள்ளவாறும், தேவைப்பட்டால் கால் பங்கு மாற்றங்களைச் செய்தும் பயிற்றுவிக்கலாம்.
அறிவுக் கலாச்சாரம்: இதைப் பார்த்ததும் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியும் கல்விப் புலச் சுதந்திரமும் என்னவாயின என்று கேட்கத் தோன்றியது. உயர் கல்வியின் முன்னேற்றத்துக்குத் தன்னாட்சி பரவலாவதுதான் வழி என்ற சிந்தனையில் கல்லூரிகளுக்கே தன்னாட்சி வழங்கிவந்ததும் இன்றைய கட்டத்தில் நகைமுரணாகத் தொனித்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
7 hours ago
வாழ்வியல்
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
11 hours ago