இ
ந்திய விடுதலைப் போராட்ட வரலாற்று நிகழ்வுகள் முழுமையான வடிவில் நம் தலைமுறையினருக்கு இன்னமும் வழங்கப்படவில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் குறுக்குநெடுக்காக லட்சக்கணக்கான போராட்ட வீரர்களின் தியாகங்கள் இன்னமும் பதிவுசெய்யப்படாமலே இருந்துவருகின்றன. இந்தப் பின்னணியில் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனைகளுக்கு பின்னால் இருந்த, வெளியே தெரியாமலே போன ஒருசில தகவல்களை மட்டும் நம் முன் வைக்கிறது இந்நூல். தொழிலில் மருத்துவராக இருந்தபோதிலும், விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனி ஈடுபாட்டுடன் தொடர்ந்து எழுதிவருபவர் சுதிப்த மித்ரா. நாட்டுப் பிரிவினைக்கு வித்திட்ட தருணங்கள், காந்தி படுகொலைக்குப் பின் அவர் ஓர் இந்துவால்தான் கொல்லப்பட்டார் என்ற உண்மையை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம், விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆயுதம் ஏந்திய இளைஞர்களின் பின்னே இருந்த தீரம் ஆகியவற்றை இந்நூலில் சுவைபட வழங்கியிருக்கிறார் ஆசிரியர். மறைந்து கிடக்கும் வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வதில் நல்ல முயற்சி.
-வீ.பா.கணேசன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
சுற்றுச்சூழல்
47 mins ago
தமிழகம்
47 mins ago
சுற்றுலா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago