‘நற்குணம் வாய்ந்த சற்குணர்’ என்பார் உ.வே.சாமிநாதர். ‘உண்மைத் தமிழன்பர்’ என்பார் வையாபுரியார். திருநெல்வேலியைப் பூர்விகமாகக் கொண்ட சாமுவேல் சற்குணருக்கும் ஞானப்பூ அம்மையாருக்கும் மகனாக 1877 மே 25ஆம் நாள் பிறந்தவர் தர்மராஜா சற்குணர். இவருடைய பாட்டனார் கல்வி கற்பதற்காகவே நெல்லையிலிருந்து நடந்தே சென்னைக்கு வந்ததாகவும் தந்தையார் அக்காலத்திலேயே பி.ஏ., பட்டம் பெற்று மாவட்டப் பதிவாளராகப் பணியாற்றியவர் என்றும் அ.கி.பரந்தாமனார் குறிப்பிடுகிறார்.
இத்தகைய கல்விப் பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்த சற்குணர், வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை கிறித்துவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தவர். ஆங்கில இலக்கியம் பயின்றாலும் தமிழிலக்கியங்களில் பெரும் ஈடுபாடும் புலமையும் கொண்டிருந்தவர். கல்லூரியில் தமிழில் முதன்மையாகத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சேதுபதி பொற்பதக்கத்தைப் பெற்றவர்.
1905இல் சென்னை ஹாரிஸ் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கியவர் சற்குணர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
மாவட்டங்கள்
1 hour ago
சினிமா
1 hour ago
மாவட்டங்கள்
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
4 hours ago