இப்போது படிப்பதும் எழுதுவதும் - செந்தூரம் ஜெகதீஷ், எழுத்தாளர்

By செய்திப்பிரிவு

எனது முந்தைய நாவலான ‘கிடங்குத் தெரு’வைக் கூடுதல் பக்கங்களோடு இன்னும் சற்றே விரிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். கூடவே, திருப்பதி ஏழுமலையானின் சரித்திரப் பின்னணி கொண்ட ஆன்மிக நாவலொன்றையும், நவீன இலக்கியத்தையும் தமிழ் சினிமாவையும் தொடர்புபடுத்தும் நாவலொன்றையும் ஒரே சமயத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஈழத்துப் பெண் கவிஞர் அவ்வை எழுதிய ‘எதை நினைந்து அழுவதும் சாத்தியமில்லை’ கவிதை நூலை சமீபத்தில் வாசித்தேன். இளவயதில் கனவாய்த் தொலைந்துபோன காதல், வயது கடந்த பிறகு உண்டாகும் காதல் என்று சுயமனதோடு வாழ நினைக்கும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளே கவிதைகளாக்கியுள்ளன. ‘அன்பைத் தேடு, பூவாய் மலர்வேன்’ என்கிற அவ்வையின் கவித்துவமான வரிகள் என்னை மிகவும் ஈர்த்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

45 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்