நமக்கு மறதி அதிகமாகிவிட்டது. இல்லையெனில், இரண்டு தலைமுறைக்கு உள்ளாகவே அனைத்தையும் மறந்து, கடந்துவந்த பாதையை மறந்து, போற்ற வேண்டியவர்களை மறந்து, தூற்ற வேண்டியவர்களைப் போற்றுவோமா என்ன? நமது இன்றைய நிலையை நினைவுபடுத்த வந்துள்ளது இந்நூல். நாட்டின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய லட்சக்கணக்கானோரில் விரல்விட்டு எண்ணத்தக்க விடுதலைப் போராட்ட வீரர்கள் தாங்கள் யாருக்காக, எதற்காகப் போராடினோம் என்று எழுதிவைத்த கடிதங்களின் தொகுப்பாக வெளிவந்த இந்நூல், நாம் கடந்துவந்த பாதையை நினைவில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. 1857-ல் தொடங்கிய இந்தியாவின் முதல் விடுதலைப் போரின் நாயகியான ராணி லஷ்மிபாய் முதல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரை இந்நூலில் பதிவாகியுள்ள தனி முத்திரை பதித்தவரின் கடிதங்கள் நம்மைக் கூனிக் குறுக வைக்கின்றன.
ரிமெம்பர் அஸ் ஒன்ஸ் இன் எ வைல்
லெட்டர்ஸ் ஆஃப் மார்ட்டியர்ஸ்
டி.என்.சதுர்வேதி பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்,
ராஜாஜி பவன், பெசண்ட் நகர், சென்னை - 90.
விலை: ரூ.130
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
44 mins ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago