வாசகரை உள்ளிழுக்கும் புத்தக அரங்கு

By செய்திப்பிரிவு

700-க்கும் மேற்பட்ட அரங்குகளோடு நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் அரங்க அமைப்பிலேயே வாசகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் அரங்குகளில் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் அரங்கும் ஒன்று. புத்தகங்களைக் குவித்து வைத்துவிட்டு, ‘முடிந்தால் தேவையான புத்தகத்தைத் தேர்ந்து எடுத்துக்கொள்’ என வாசகர்களுக்கு சவால் விடாமல், நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் பல வகையான காட்சிப்படுத்துதலே வாசகரை இந்த அரங்குக்குள் அழைப்பதாக அமைந்துள்ளது. இதுகுறித்து சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பக உரிமையாளர் கே.எஸ்.புகழேந்தியிடம் கேட்டபோது, “வாசகர்களை ஈர்க்கும் வகையில் அரங்குகளை அமைப்பதில் நாம் இன்னும் ரொம்பவே பின்தங்கியுள்ளோம் என்பதை டெல்லி போன்ற இடங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகளைப் பார்க்கையில் உணர்ந்துகொண்டேன். அதற்காகவேதான் இம்முறை புத்தகங்களை வாசகர் எளிதாக கண்டெடுக்கும் வகையில் பெரிய அரங்கில் நிறைய இடைவெளிகளோடு புத்தகங்களைக் காட்சிப்படுத்தியுள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்