நூல் வெளி: ஒரு சொட்டுத் தூறல்

By பெருமாள் முருகன்

1979 ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கிய தேவிபாரதி (பிறப்பு: 1957) முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் சிறுகதைகள் எழுதிவருகிறார். கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றில் ஈடுபட்டாலும் சிறுகதையே பிரதானம். 1990களில் ‘நிகழ்’ இதழில் வெளியான ‘பலி’ சிறுகதை பெரிதும் கவனம் பெற்றது. ‘தலித் இலக்கியம்’ என்னும் வகைமை உருவான அக்காலகட்டத்தில் ‘பலி’ பெரிதும் விவாதத்திற்கு உள்ளானது. அதன் பின் அவர் எழுதிய பல சிறுகதைகள் ஆண் – பெண் உறவில் நேரும் உளவியல் சிக்கல்களையும் விழுமியச் சிதைவுகளையும் மையப்படுத்தின. சம்பவங்களாலும் மொழியாலும் வாசிப்போருக்குப் பதற்றத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை அவை.

பின்னர் காந்தியைப் பாத்திரமாக்கிய ‘பிறகொரு இரவு’ நெடுங்கதையும் அத்தலைப்பில் வெளியான நூலில் உள்ள பிற கதைகளும் அவர் எழுத்துப் பரிமாணத்தின் இரண்டாம் கட்டமாக அமைந்தன. சிறுகதை வடிவத்தைத் தாண்டி குறுநாவல் அளவிலானவை இக்கதைகள். முந்தைய கதைகளின் தொடர்ச்சியாகப் பிற கதைகள் அமைந்தாலும் அவற்றின் மொழியும் சொல்முறையும் வேறுபட்டு விளங்கின. ‘பிறகொரு இரவு’ காந்தியைப் புதிய கோணத்தில் காணும் பார்வையைக் கொண்டு ஆச்சரியமூட்டியது. சில ஆண்டுகள் சென்னை வாசம் தவிர, பெரும்பாலும் கொங்குப் பகுதி கிராமம் ஒன்றிலேயே வாழ்ந்தவர் அவர். எனினும் சிறுகதைகளில் அவர் கவனம் செலுத்திய இவ்விரு கட்டத்திலும் வட்டார வாழ்வியல், வட்டார மொழி ஆகியவற்றைப் பெரிதும் தவிர்த்தே வந்தார். அவை இலக்கியத்தின் வீச்சைக் குறுக்கிவிடும் எனக் கருதியிருக்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

52 secs ago

தமிழகம்

16 mins ago

கல்வி

36 mins ago

ஆன்மிகம்

53 mins ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்