சேலை தரத்தைக் காரணம் காட்டி திருமணம் நிறுத்தம்: மணமகன் ஓட்டம்; மணப்பெண் புகார்- கர்நாடகாவில் விநோதம்

By ஐஏஎன்எஸ்

திருமணச் சடங்குக்காக மணமகள் அணிந்திருந்த சேலை தரமற்றதாக இருப்பதாகக் கூறி மாப்பிள்ளை வீட்டார் தகராறு செய்யவே மணமகன் ஓட்டமெடுத்தார். அற்ப காரணத்துக்காக திருமணம் நின்றுபோன சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

திருமணம் நின்றுபோக பல்வேறு காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் சிறு விஷயங்களுக்காகக்கூட திருமணம் நின்று போன கதைகள் உண்டு.

ஆனால், கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் பிதாரக்கரே என்ற கிராமத்தில் சொற்ப காரணத்துக்காக திருமணம் நிறுத்தப்பட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஹசனைச் சேர்ந்த ரகுகுமாரும் சங்கீதாவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் ஏற்பாடானது. இந்நிலையில், திருமணச் சடங்கின்போது மணப்பெண் அணிந்திருந்த புடவை தரமற்றதாக இருப்பதாகக் கூறி மாப்பிள்ளை வீட்டார் அதனை மாற்றச் சொல்லியுள்ளனர். இதில் இருவீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மணமகன் திருமண மண்டபத்திலிருந்து மாயமானார்.

இது தொடர்பாக ஹசன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெண் வீட்டாரை அதிர வைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்