இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா தனது தனித்துவ செயல்பாட்டின் மூலம் எண்ணற்ற மனிதர்களை கவர்ந்துள்ளார். அது அவரது தொழில், தொண்டு சார்ந்த பணிகள் என நபருக்கு நபர் மாறுபடும். பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக திகழ்கிறார்.
85 வயதான ரத்தன் டாடா, சுமார் 21 ஆண்டுகள் டாடா குழுமத்திற்கு தலைமை தாங்கினார். அப்போது அந்நிறுவனத்தின் வருவாயும், லாபமும் பல மடங்கு பெருகி இருந்தது. இப்போது அவர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தனது முதலீடுகள் மூலம் ஊக்கம் கொடுத்து வருகிறார். ஏனோ அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த சூழலில் அவரது காதல் கதை இப்போது கவனம் பெற்றுள்ளது.
தனது இளம் வயது காதல் கதையை சில ஆண்டுகளுக்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் ரத்தன் டாடா பகிர்ந்திருந்தார். திருமணம் வரை சென்ற அந்த காதல் ஏன் அவருக்கு கைகூடவில்லை என்பதை பார்ப்போம்.
சினிமா பட பாணியில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ரத்தன் டாடா இருந்தபோது தன் மனம் கவர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக தகவல். இருவரும் தங்கள் காதலின் அடுத்தகட்டமாக இல்வாழ்க்கையில் இணைந்து பயணிக்க விரும்பியதாகவும் தெரிகிறது. திருமணம் வரை அவர்களது காதல் சென்ற நிலையில் ரத்தன் டாடா, தனது பாட்டியை பக்கத்தில் இருந்து கவனித்து கொள்ள வேண்டிய காரணத்தால் இந்தியா திரும்பியுள்ளார்.
பின்னர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டு இந்தியாவில் வந்து செட்டில் ஆக அவர் திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கான நகர்வுகளையும் அவர் முன்னெடுத்துள்ளார். ஆனால், அதற்கு அவரது காதலியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். 1962-ல் ஏற்பட்ட இந்தியா - சீனா இடையிலான போர் தான் அதற்கு காரணம் என தெரிகிறது. அதன் பிறகு அவர் வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுநாள் வரையில் அவர் யாரை காதலித்தார் என்ற விவரத்தை பகிராமல் உள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
க்ரைம்
40 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago