ஜெகன்மோகன் சிறை செல்வார்: அமைச்சர் கணிப்பு

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநில கூட்டுறவு அமைச்சர் ஆதிநாராயண ரெட்டி கடந்த தேர்தலில் ஜம்மலமொடுகு தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் இவர் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இவர் நேற்று கடப்பாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெறும்.

ஆனால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் 11 சொத்து குவிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவருமான ஜெகன்மோகன் முதல்வர் ஆவது குறித்து கனவு காண்கிறார். விரைவில் இவர் பாத யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

இவர் கூறுவதை மக்கள் நம்புவார்களா? வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் ஜெகன்மோகன் ரெட்டி சிறைக்கு போவது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்